சிறைக்கைதிகளைப் பார்வையிட சந்தர்ப்பம்..!
119ஆவது சிறைச்சாலைகள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 16ஆம் திகதி சிறைக்கைதிகளைத் திறந்த வெளியில் சந்திப்பதற்கு உறவினர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் கைதிகளைப் பார்வையிட வருபவர்கள் உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

![]()