சீரற்ற காலநிலையினால் பறிபோன 32 உயிர்கள்..!
சீரற்ற காலநிலை அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒருவரைக் காணவில்லை என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் 56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
1,973 பாதுகாப்பான மையங்களில் 7,639 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சீரற்ற காலநிலை காரணமாக 63,413 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()