மாவட்ட மகளிர் கிரிக்கெட் சங்கத்தின் 28 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் லங்கா ஐ.ஓ.சி. நிறுவத்தின் அனுசரணையில் நடைபெறவுள்ளது.
மேலும் ஆடவர் மற்றும் மகளிருக்கான சுப்பர் சிக்ஸ் மென்பந்து கிரிக்கெட் தொடர் இன்று (24) மற்றும் நாளைய தினம் (25) வெலிசர நவலோக்க கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளுக்கான போட்டிகள் வெவ்வேறாக நடைபெறவுள்ளதோடு
ஆட்ட நாயகன், தொடர் நாயகன், சிறந்த களத்தடுப்பாளர் போன்ற விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திபக் தாஸ் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளார்.
இவ்வாறான போட்டித் தொடர் ஒன்றுக்கு லங்கா ஐ.ஓ.சி. அனுசரணை வழங்குவது இதுவே முதல் முறையாகும் என்பதும் குரிப்பிடதக்கது.