செம்மணி மனிதப்புதைக்குழியைச் சுற்றிய விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிட்ட கருத்துக்கள் விரிவான மற்றும் நேர்மையான அணுகுமுறையை காட்டவில்லை என விமர்சிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் பற்றி ஐ.நா. உயர்ஸ்தானிகருடன் தமிழ் தலைவர்கள் விரிவாக கலந்துரையாடியதாக திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் பெண்கள் மற்றும் சிறார்கள் தாக்கி கொல்லப்படும் சம்பவங்களைப் பற்றி எந்த வகையான நடவடிக்கையும் எடுக்காத உயர்ஸ்தானிகரிடம் இருந்து, செம்மணி போன்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பது மிகைப்படுத்தலாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



