Tamil News Channel

Blog Post

Tamil News Channel > News > ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் வெற்றி உறுதி…!

ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் வெற்றி உறுதி…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடவுள்ள ரணிலின் வெற்றி உறுதி என கல்முனை மேற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் ஏ.எச்.எச்.எம்.நபார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல அரசியல் கட்சிகள், பல்துறைசார்ந்த சமூகவியல் அமைப்புகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் போன்ற பலரின் ஆதரவோடு பொதுவேட்பாளராக நிச்சயமாக போட்டியிடுவார்.

எனவே, நாட்டின் தேசிய சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களில்  நீண்ட கால அனுபவம் கொண்ட இவரால் மாத்திரமே நாட்டின் சமகால அரசியல் பொருளாதார சமூகங்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க முடியும்.

இந்த உண்மையை உள்ளத்தினால் ஏற்றுக்கொண்ட நாட்டின் குடிமக்கள் நிச்சயமாக ஜனாதிபதியாக ரணிலை வெற்றி பெற செய்வார்கள் என ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் ஏ.எச்.எச்.எம்.நபார் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *