மட்டக்களப்பு சிறைச்சாலையில் 8 கிராம் ஜஸ்போதை பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை  கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தர்  சிறைச்சாலையில் கடமையில் இருந்த நிலையில்  சிறைக்காவலர் சோதனையிட்ட போது அவரிடமிருந்து 8 கிராம் ஜஸ்போதை பொருளை மீட்டதுடன், அவரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இச்  சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் அநுராதபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here