Tamil News Channel

ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு இப்படியொரு காரணமா?

je1

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய காரணம் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் ஜெயம் ரவி கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆர்த்தியும் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் தான். அவரது தாய் சுஜாதா சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகின்றார்.

இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் பிரிய உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதற்கு ஏற்ப ஆர்த்தியும் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தினை நீக்கியதுடன் அவரை, Unfollow செய்துள்ளதும் பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மாமியாருடன் ஏற்பட்ட வாக்குவாதம் இவர்களின் பிரிவிற்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிய காரணம் ஒன்றினை பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிக்கையாளர் அந்தணன் கூறுகையில், “ ஜெயம் ரவி அவரின் மாமியாரிடம் சம்பளம் கேட்டது பெரிய பிரச்சனை கிடையாது, ஆர்த்திக்கு ஜெயம் ரவி மீது சந்தேகம் அதிகமாகவே வரும்.

படப்பிடிப்பில் அடிக்கடி போன் செய்வார். போன் எடுக்கவில்லை என்றால் உடன் பணிபுரியும் அனைவருக்கும் போன் போட்டு விவாரித்து விடுவார்.

ஒரு கட்டத்தில் யாரும் போன் எடுக்கவில்லை என்றால் நேரடியாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.

ரவியை தொடர்வு கண்காணிப்பது போன்று ஆர்த்தி நடந்து கொண்டது நாளுக்கு நாள் அதிகமானதால், ஒரு கட்டத்தில் இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் இருவருக்கும் பிரச்சனை தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts