அமெரிக்காவின் – ஓகாயோ பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரரான லேரி கானர் (Larry Connor) கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க புதிய நீர்மூழ்கி கப்பல் ஒன்றை வடிவமைத்து வருகிறார்.
இதன்படி, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு கடலுக்கு அடியில் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.
74 வயதான லேரி டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக ட்ரைடன் சப்மரைன்ஸ் என்ற நிறுவனத்தை அணுகியுள்ளார்.
அவருக்காக வடிவமைக்கப்பட்டு வரும் இந்த நீர்மூழ்கியில் இரண்டு பேர் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் சுமார் 12,500 அடி ஆழம்வரை செல்லும் இந்த பயணத்தில் அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் நோக்கம் பாதுகாப்பான முறையில் ஆழ்கடலுக்கு பயணிக்கலாம் என்பதை உலகுக்கு நிரூபிப்பது” என கூறியுள்ளார்.
மேலும் இந்த நீர்மூழ்கிக்கு ‘தி எக்ஸ்புளோரர் ரிட்டர்ன் டு தி டைட்டானிக்’ என பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 2 மணி நேரத்தில் கடலில் 13,000 அடி ஆழம் வரை இதில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.