தமிழரசுக் கட்சி தலைமை தெரிவுக்கு இரகசிய வாக்கெடுப்பு நடார்த்த முடிவு

இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் பதவிக்காக போட்டியிடும் மூவரும் விட்டுக்கொடுப்பு இல்லாததால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தி தலைவரை தெரிவு செய்வதென நேற்று(11) முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இப்பதவிக்கு போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர்களான சி. சிறிதரன், எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பியோகேஷ்வரன் மூவரும் நேற்று (11) மு.ப. 10.45 மணிக்கு மாதிவெல, சிறிதரனின் விடுதியில் கூடி பேசியுள்ளனர்.

புதிய தலைமைப் பதவிக்கு போட்டியிடும் எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் கூடிப்பேசுவதற்குநேற்று முன்தினம் இணக்கப்பாடு எட்டப்பட்டது. இதற்கென, அவர்களுக்கு ஒருநாள் அவகாசமும் வழங்கப்பட்டது.

இதன் பின்னரே தேர்தலை நடத்துவதா? இல்லையா? என்ற இணக்கப்பாட்டுடன், சம்பிரதாய அடிப்படையில் தலைவரை ஏகமனதாக நியமிப்பதா? என்று தீர்மானிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் கொழும்பில் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் (11) பிற்பகல் மாவை.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே கால அவகாசம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், தவராசா கலையரசன்,வடமாகாண தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம், பொருளாளர் கனகசபாபதி, உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

எதிர்வரும் 21ஆம் திகதி கட்சியின் புதிய தலைமைக்கான தெரிவு தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

இந்த விடயம் சம்பந்தமாக, இரா.சம்பந்தன், மாவை, தவராசா,கனகசபாபதி, உள்ளிட்டவர்கள் கட்சியின் கடந்த காலச் சம்பிரதாயத்துக்கு அமைவாக இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய தலைமை தெரிவு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

Hot this week

வானியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: ரூபின் ஆய்வகம் முதல் படங்களை வெளியிட்டது!

அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) மற்றும் ஆற்றல் துறை (DOE)...

தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையில்லை!

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான்...

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய...

பாங்கொக்கில் இலங்கை எழுச்சி – தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களால் தொடரும் சாதனைகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான தாய்லாந்து பகிரங்க சுவட்டு, மைதான...

Topics

வானியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: ரூபின் ஆய்வகம் முதல் படங்களை வெளியிட்டது!

அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) மற்றும் ஆற்றல் துறை (DOE)...

தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையில்லை!

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான்...

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய...

பாங்கொக்கில் இலங்கை எழுச்சி – தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களால் தொடரும் சாதனைகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான தாய்லாந்து பகிரங்க சுவட்டு, மைதான...

சமாதானம் காணும் முன் வீழ்ந்த உயிர்கள் – இஸ்ரேலின் தாக்குதலில் 10 IRGC வீரர்கள் பலி!

ஈரானின் யாசுது மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இத் தாக்குதலில்,...

மௌனமான அதிகாலையில் துப்பாக்கியின் சத்தம் – காலியில் பரபரப்பு!

காலி - அக்மீமன பகுதியில் அமைந்துள்ள வெவேகொடவத்தை பகுதியில் இன்று அதிகாலை...

“நம்பிக்கையின் நடுவே நாசம்!” – சிரியாவை அதிர வைத்த ஜெபத்தின் போது நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதல்!

சிரியா, டமாஸ்கஸ் நகரின் புறநகரான டுவெய்லா பகுதியில் மார்இலியாஸ் கிரேக்கம் உர்தோடாக்ஸ்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img