தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளை நிச்சயமாக பெற்றுக்கொடுப்பேன் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விசேட கள விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தெற்கும் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் , களுதாவளை ஆரம்ப சுகாதார மருத்துவ பிரிவு வைத்தியசாலையிற்கு வருகை தந்த அமைச்சர் வைத்தியசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்தார்.
பின்னர் களுதாவளையில் மூடப்பட்ட நிலையில் காணப்படும் விசேட பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டதுடன் , இதனை வெகு விரைவில் ஆரம்பிப்பதற்குரிய வேலைகளை முன்மொழிவதாகவும் தெரிவித்துள்ளார்.
![]()