Wednesday, March 11, 2026

திருகோணமலைக்கு ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் விஜயம்

Must Read

ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் நேற்று திருகோணமலை மாவட்டத்தின் குளக்கோட்டன் பூங்காவில் அமைக்கப்பட்ட சிறுவர்களது பொழுது போக்கு ரயில் ஒன்றினை பார்வையிட வருகை தந்திருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவதற்காக வந்திருந்த திரு.டேவிட் மற்றும் திருமதி.பெயா தலைமையிலான குழுவினர் குறித்த ரயிலினை பார்வையிட்டதுடன் பெற்றோர் சிலருடனும் கலந்துரையாடினர்.

இவ்வாறான பொழுதுபோக்கு அம்சங்கள் திருகோணமலையில் குறைவாகவே காணப்படுவதாகவும், குறிப்பாக இளைஞர் யுவதிகளுக்கான சில விளையாட்டு அம்சங்கள் சார்ந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும்பட்சத்தில் திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த சிறார்களது நாளாந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்த முடியும் எனவும் இதன் போது பெற்றோர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பிலும் பரீட்சிப்பதாக குறித்த குழுவினர் நம்பிக்கையும் வழங்கியிருந்தனர்.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights