திருகோணமலை கடற்கரையில் தொடர்ச்சியாக குவியும் வெளிநாட்டு குப்பைகள்  

திருகோணமலை கடற்கரையோரத்தில் தற்போது அதிகளவு குப்பைகள் குவிந்து வருவதாகவும், அதில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து வந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை  நேற்றைய தினம் (11) தெரிவித்துள்ளது.

தற்போது கடற்படை மற்றும் ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியை திருகோணமலை மாநகர சபை மேற்கொண்டு வருகின்றது.

 அந்த சுத்த பணிக்கு  உழவு இயந்திரங்கள் மற்றும் பெகோ இயந்திரங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது.

பருவமழைக் காலங்களில் கடலுக்கு அடியில் ஓடும் நீரோட்டம் காரணமாக, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து வரும் குப்பைகள், இலங்கைக் கடற்கரையில் வந்தடைவது கடந்த வருடங்களில் இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை மாவட்ட கடல்சார் சுற்றாடல் உத்தியோகத்தர் ஏ.ஆர்.எச். மொஹீன்  தெரிவித்தார்.

அவற்றுடன் காணப்படும் பிளாஸ்டிக் போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள லேபல்களில் அவை எந்த நாடுகளின் குப்பைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடற்கரையில் சேரும் குப்பைகளில் காணப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் கொள்கலன்கள் காரணமாக பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாகவும், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருடன் குறித்த இடங்களை பார்வையிட்டு குப்பைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்கு மாநகர சபை அதிக செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி கே. விஜயகுமார் தெரிவித்தார். இதற்கு மாநகர சபை அதிக செலவு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திள்ளார்.

திருகோணமலை கடற்கரையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணிகளை திருகோணமலை மாவட்ட செயலாளர்மற்றும்  மாநகர ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

Hot this week

வானியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: ரூபின் ஆய்வகம் முதல் படங்களை வெளியிட்டது!

அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) மற்றும் ஆற்றல் துறை (DOE)...

தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையில்லை!

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான்...

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய...

பாங்கொக்கில் இலங்கை எழுச்சி – தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களால் தொடரும் சாதனைகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான தாய்லாந்து பகிரங்க சுவட்டு, மைதான...

Topics

வானியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: ரூபின் ஆய்வகம் முதல் படங்களை வெளியிட்டது!

அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) மற்றும் ஆற்றல் துறை (DOE)...

தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையில்லை!

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான்...

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய...

பாங்கொக்கில் இலங்கை எழுச்சி – தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களால் தொடரும் சாதனைகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான தாய்லாந்து பகிரங்க சுவட்டு, மைதான...

சமாதானம் காணும் முன் வீழ்ந்த உயிர்கள் – இஸ்ரேலின் தாக்குதலில் 10 IRGC வீரர்கள் பலி!

ஈரானின் யாசுது மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இத் தாக்குதலில்,...

மௌனமான அதிகாலையில் துப்பாக்கியின் சத்தம் – காலியில் பரபரப்பு!

காலி - அக்மீமன பகுதியில் அமைந்துள்ள வெவேகொடவத்தை பகுதியில் இன்று அதிகாலை...

“நம்பிக்கையின் நடுவே நாசம்!” – சிரியாவை அதிர வைத்த ஜெபத்தின் போது நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதல்!

சிரியா, டமாஸ்கஸ் நகரின் புறநகரான டுவெய்லா பகுதியில் மார்இலியாஸ் கிரேக்கம் உர்தோடாக்ஸ்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img