திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை..!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில் சிறையில் இருந்த முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய அனைவரும் 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து இன்று குறித்த மூவரும் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
இன்று காலை 11:30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இவர்கள் மூவரும் வந்தடைவார்கள் என முருகன் சார்பில் வழக்காடிய சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,குறித்த மூவரையும் விரைவில் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், மூவரும் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()