December 13, 2025
தேசிய கொடியை அவமதிப்பவர்களுக்கு எதிராக விடுத்துள்ள எச்சரிக்கை..!
News News Line Top Updates புதிய செய்திகள்

தேசிய கொடியை அவமதிப்பவர்களுக்கு எதிராக விடுத்துள்ள எச்சரிக்கை..!

Jan 31, 2024

தேசிய கொடியை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என  பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடல் வீதி முழுமையாக மூடப்படவுள்ளது.

அதன்படி எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி பகல் 2 மணி முதல் 4 ஆம் திகதி பகல் 12 மணி வரை குறித்த வீதி முழுமையாக மூடப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு தேசிய கொடியை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவற்றை கண்காணிப்பதற்கு தனி குழு அமைப்பக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *