Tamil News Channel

தேர்தல் குறித்து வெளிவரவுள்ள அறிவிப்பு..!

24-66082f01c054e

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்குமிடையில் தேர்தல் இடம்பெறக் கூடும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு 2024ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும்.

இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts