January 13, 2026
நடைமுறைக்கு வரும் பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டம்!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

நடைமுறைக்கு வரும் பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டம்!

Sep 3, 2025

பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (03) சான்றுரைப்படுத்தினார்.

கடந்த 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டமூலம், 2025 ஆம் ஆண்டின் 17 இலக்க பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.

இச்சட்டத்தின் மூலம், சூதாட்டம் தொடர்பான பழைய சட்டங்கள் (குதிரைப் பந்தய பந்தயம் சட்டம், சூதாட்டக் கட்டளைச்சட்டம், சீட்டாட்டத் தொழில் ஒழுங்குபடுத்தல் சட்டம்) ரத்து செய்யப்படுகின்றன.

புதிய சட்டம் பணச்சூதாட்டத் தொழிலுக்கான தனிப்பட்ட ஒழுங்குபடுத்தும் நிறுவனத்தை உருவாக்குவதுடன், கப்பல்கள் மற்றும் கொழும்பு துறைமுக நகரில் நடைபெறும் ஆன்லைன் மற்றும் கடல்கடந்த பணச்சூதாட்ட செயற்பாடுகளையும் கண்காணிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *