பதுளை, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு இடம்பெறலாமென எச்சரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பதுளை மாவட்டத்தின் மீகாஹாகிவுல, கேகாலை, மாத்தளை மாவட்டத்தின் கொடபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.