November 17, 2025
நீராடச் சென்ற  நபருக்கு ஏற்பட்ட சோகம்..!
News News Line Top Updates புதிய செய்திகள்

நீராடச் சென்ற நபருக்கு ஏற்பட்ட சோகம்..!

Apr 1, 2024

லிகொலவெவ, உஸ்கலசியம்பலங்காமுவ பிரதேசத்தில் 66 வயதுடைய பெண் ஒருவரை முதலை ஒன்று இழுத்துச் சென்றதில்  உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் நேற்று(31)  மாலை மீகலேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலங்குட்டிவ கால்வாயில் நீராடச் சென்றபோதே   முதலை  இழுத்துச் சென்றுள்ளது.

பின்னர் பிரதேசவாசிகள் முதலையிடம் இருந்து பெண்ணை மீட்டு தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்தார்.

மேலதிக விசாரனைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *