January 13, 2026
பட்டமளிப்பு விழாவை பிற்போடுவது தவறு;-கலாநிதி பிரபாத் ஏகநாயக்க
Updates கல்வி புதிய செய்திகள்

பட்டமளிப்பு விழாவை பிற்போடுவது தவறு;-கலாநிதி பிரபாத் ஏகநாயக்க

May 29, 2024

கல்வி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பட்டமளிப்பு விழாவை பிற்போடுவது இளங்கலை மாணவர்களின் உரிமைகளை பாரியளவில் மீறுவதாக பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏகநாயக்க எழுத்து மூலம் உபவேந்தருக்கு அறிவித்துள்ளார்.

அதில் மேலும் கூறியிருப்பதாவது: பல்கலைகழகத்தின் மிக முக்கிய கல்வி நிகழ்வான பட்டமளிப்பு விழா ஒரு சிலரின் தன்னிச்சையான நடவடிக்கையால் பிற்போடபட்டுள்ளதால் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன்.

இந்த முடிவு எங்கள் மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளின் உரிமைகளை கடுமையாக மீறுகிறது என்று நான் நம்புகிறேன்.

கல்வி சாரா சங்கங்களின் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் தொலைநோக்கு பார்வையற்றவர்களே இந்த நிலைக்கு முழு பொறுப்பு.

இந்நிலைமையை கல்விசாரா ஊழியர்களும் பல்கலைக்கழக நிர்வாகமும் கண்டிக்க வேண்டும்.

கல்வி சாரா சங்க தலைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பீடாதிபதிகளாகிய நாமும் இந்த மனித உரிமை மீறலின் அங்கமாகி விடுவோம்.

எனவே, பட்டமளிப்பு விழாவை சீர்குலைக்கும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, மேல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *