பதுளை பிரதேசத்தில் பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 5 அடி உயரமுடையவர் என்பதுடன் சாம்பல் நிற காற்சட்டை ஒன்றை அணிந்துள்ள 50 வயது மதிக்கதக்கவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சடலமானது பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Views: 3