பதுளை போதனா மருத்துவமனையின் தற்போதைய சேவைகள் மற்றும் எதிர்கால மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் ஆய்வு விஜயம் ஒன்று இடம்பெற்றது.

ஊவா மாகாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவையளித்து வரும் இந்த மருத்துவமனை, 1500 படுக்கைகள், 2400-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் மற்றும் 45 வார்டுகளுடன் தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வருகிறது.

மருத்துவமனையின் ஆண்டு செயல் திட்டம் – 2026, பேராசிரியர் பிரிவுகளைக் கொண்ட பத்து மாடிக் கட்டடம், மனித மற்றும் பௌதீக வள மேம்பாடு, அவசர சிகிச்சை, மருத்துவ உபகரணங்கள், டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

மருத்துவமனையை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் வகையில் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, ஊவா மாகாண ஆளுநர் ஜே.எம். கபில ஜெயசேகர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here