பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்குள்ளான ஹொலிவுட் நடிகர் ரசல் பிராண்ட் ..!!
ஹொலிவுட் நடிகரும் நகைச்சுவை கலைஞருமான ரசல் பிராண்ட் (Russell Brand) மீது, பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக மேலும் இரண்டு புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.
50 வயதான ரசல் பிராண்ட் மீது ஏற்கனவே நான்கு பெண்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஐந்து குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது மேலும் இரண்டு பெண்கள் முன்வைத்த முறைப்பாடுகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2009 ஆம் ஆண்டில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, எதிர்வரும் வரும் 2026 ஜனவரி 20ஆம் திகதி அவர் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 1999 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் மத்திய லண்டன் மற்றும் போர்ன்மவுத் பகுதிகளில் நான்கு பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் முறைப்பாடுகளில், அவர் குற்றமற்றவர் என ஏற்கனவே வாதிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரதான விசாரணை 2026 ஜூன் 16ஆம் திகதி சவுத்வோர்க் கிரவுன் நீதிமன்றத்தில் தொடங்க உள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளது.
2023ஆம் ஆண்டில் சண்டே டைம்ஸ் மற்றும் செனல் 4 டிஸ்பாட்சஸ் (Dispatches) வெளியிட்ட புலனாய்வுச் செய்திகளைத் தொடர்ந்து, ரசல் பிராண்ட் மீதான இந்த குற்றச்சாட்டுகள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பொலிஸார் வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
![]()