Tamil News Channel

பாவற்குளத்தில் இளம்பெண் பலி

paavatkulam 2 pic

வவுனியா பாவற்குளத்தில்  இளம் யுவதி ஒருவரின்  சடலத்தை நேற்று (21) மாலை பொலிசார் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இளம்பெண் ஒருவர் குளத்தினுள் வீழ்ந்துள்ளார். இதனை அவதானித்த சிலர் உடனடியாக விரைந்து செயற்ப்பட்டு பெண்ணை மீட்டதுடன் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் முன்னரே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 20 வயதுக்குற்பட்ட  மதிக்கத்தக்க இளம் யுவதியே இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் அவர் இது வரை அடையாளம் காணப்படவில்லை.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts