வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற தற்காலிக பணியாளர்களுக்கான நிரந்தர நியமனமங்களை பிரதமர் தினேஷ் குணவர்த்தன நேற்று யாழ்ப்பாணத்தில் வழங்கி வைத்தார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களிலே தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்த 175 பேருக்கான நியமனங்களை நேற்றைய தினம் பிரதமர் யாழ்ப்பாண பொது நூலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ். எம் சாள்ஸ் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரதேச செயலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
Post Views: 2