Tamil News Channel

பிளாஸ்டிக் இல்லாத நாட்டை உருவாக்கும் செயல் திட்டத்தில் கிளிநொச்சி பொலிஸார்!

IMG-20240701-WA0082

பிளாஸ்டிக் இல்லாத நாட்டை உருவாக்கும் தொனிப்பொருளில் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வரும்  பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் கூடைகளை பொருத்தமான இடங்களில் இனம் கண்டு கூடைகளை வைத்து வருகின்றார்கள்.

குமரபுரம் 6 ஆம் வீதி கலைச்செல்வி மோகனபவன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இக் கிளிநொச்சி பொலிஸாருக்கு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் கூடைகளை வழங்கியுள்ளார்.

இப் பொருட்களை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையிடம் வழங்கும் நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்தது சில்வா, கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி, கரைச்சி பிரதேச சபையின் பொறுப்பு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் என பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்கள்.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts