Thursday, March 12, 2026

புதிய கடவுச்சீட்டு பெறுவதற்கான புதிய வழிமுறை…!!

Must Read

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களின் வசதிக்காக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான புதிய வழிமுறையை அறிவித்துள்ளது.

இன்று (17.07) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் புதிய முறை அமல்படுத்தப்பட்டதாக குடிவரவுத் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

https://www.immigration.gov.lk என்ற இணைப்பின் ஊடாக கடவுச்சீட்டிற்கு முன் பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

குடிவரவுத் திணைக்களம் பதிவு செய்ததன் பின்னர் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்பு முன்னுரிமை அடிப்படையில் பெறப்படும் என்றும், இது சாதாரண மற்றும் ஒரு நாள் சேவைகளுக்குக் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights