குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களின் வசதிக்காக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான புதிய வழிமுறையை அறிவித்துள்ளது.
இன்று (17.07) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் புதிய முறை அமல்படுத்தப்பட்டதாக குடிவரவுத் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
https://www.immigration.gov.lk என்ற இணைப்பின் ஊடாக கடவுச்சீட்டிற்கு முன் பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
குடிவரவுத் திணைக்களம் பதிவு செய்ததன் பின்னர் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்பு முன்னுரிமை அடிப்படையில் பெறப்படும் என்றும், இது சாதாரண மற்றும் ஒரு நாள் சேவைகளுக்குக் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



