February 9, 2026
புதிய காத்தான்குடி ஜும்மா பள்ளிவாசல் விசேட ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி!
புதிய செய்திகள்

புதிய காத்தான்குடி ஜும்மா பள்ளிவாசல் விசேட ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி!

Jun 24, 2024

புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசலில் நேற்று இடம்பெற்ற விசேட ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க .

இதன் போது உரையாற்றிய ஜனாதிபதி காஸா பகுதியில் நிலவும் மோதலில் இலங்கையின் அசைக்க முடியாத நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் முகமாக பாலஸ்தீன அரசை ஸ்தாபிப்பதற்கான ஆதரவில் இலங்கை உறுதியாக இருப்பதாக வலியுறுத்தினார்.

புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல் ரூ. 10,769,417 “காசா குழந்தைகள்” நிதிக்கு, காசாவில் மோதல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்க ஜனாதிபதியின் உத்தரவுகளின் கீழ் நிறுவப்பட்டது.

இவ் விழாவின் போது பள்ளிவாசல் அறங்காவலர்கள் நன்கொடை காசோலையை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *