January 13, 2026
புதுக்குடியிருப்பில் சந்தேக நபர்கள் அதிரடியாக கைது…!!
புதிய செய்திகள்

புதுக்குடியிருப்பில் சந்தேக நபர்கள் அதிரடியாக கைது…!!

Jul 4, 2024

முல்லைத்தீவுபுதுக்குடியிருப்பு பகுதியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து யுக்திய சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு 9ஆம்,10ஆம் வட்டார பகுதிகளில் குறித்த சுற்றிவளைப்பானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போதுபல குற்றங்களுடன் தொடர்புபட்ட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, திறந்த பிடியாணை நபர்கள் இருவரும், காவல்துறையினரால் ஒருநாள் பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரும், 43 லீற்றர் கசிப்புடன் திருகோணமலையை சேர்ந்த பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவருமாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *