ஓமந்தை, விளாத்திக்குளம் பகுதியில் வைத்து பூசாரி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஓமந்தைப் பொலிசாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார், விளாத்திக்குளம் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட 5 பேரினை கைது செய்துள்ளனர்.
கண்டி பகுதியில் இருந்து வருகை தந்த பூசாரி மற்றும் வவுனியாவின் தவசிகுளம், ஓமந்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நபர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளின் பின் குறித்த 5 பேரையும் வவுனியா நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Post Views: 2