
புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய வெற்றிக்கனி நூல் அன்பளிப்பு நிகழ்வு!
யா/உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலையில் இன்று சனிக்கிழமை பாரி அறக்கட்டளை நிலையத்தினரால் யா/மாமுனை அ.த.க.பாடசாலை தொடக்கம் யா/கேவில் அ.த.க.பாடசாலை வரையான 11 பாடசாலைகளின் தரம் 5 மாணவர்கள் 143 பேருக்கும் பாரி அறக்கட்டளை நிலையத்தினரால் புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய வெற்றிக்கனி நூல் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அவ் அறக்கட்டளை நிலையத்தின் தலைவர் S.Nigesh ,உறுப்பினர் Sujenthiran வடமராட்சி வலயக்கல்விஅலுவலக கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்விப்பணிப்பாளர் அருந்தவசெல்வன் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் யசோதரன் ,செயற்பட்டு மகிழ்வோம் வளவாளர் மதியழகன் ஆகியோரும்,11 பாடசாலைகளின் ஆசிரியர்கள் மாணவர்களுடன்,பெற்றோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.