குருணாகலில் இளம் தாய் ஒருவரின் செயற்பாடு ஒட்டுமொத்த பெற்றோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சித்தார்த்தா மகா வித்தியாலத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தனது மகனுக்காக தாய் மரதன் ஓட்டப்போட்டியில் நான்கு கிலோமீற்றர் தூரத்தை தனது மகனுடன் சேர்ந்து ஓடியுள்ளார்.
இச்செயல் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளதுடன், அனைத்து பெற்றோருக்கும் முன்னுதாரணமாக மாறியுள்மை குறிப்பிடத்தக்கது.