July 14, 2025
பேருந்துகளில் இன்று முதல் விசேட நடைமுறை
News News Line Top Updates இலங்கை அரசியல் புதிய செய்திகள்

பேருந்துகளில் இன்று முதல் விசேட நடைமுறை

Feb 8, 2024

பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்பவர்களுக்கு எதிராக பொது போக்குவரத்துகளில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த விசேட நடவடிக்கை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளமை  குறிப்பிடதக்கது.

இதற்கமைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பெண்களுக்கு பொது போக்குவரத்துகளில் இடையூறு ஏற்படுத்துவோர் தொடர்பில் அறிவிப்பதற்கு 109 எனும் அவசர இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *