Tamil News Channel

பேருந்து விபத்தில் பலர் காயம்…!!

bus

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – திருகோணமலை பிரதான வீதியின் 96ம் கட்டை முள்ளிப்பொத்தானையில் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (10.07) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் பேருந்து பாதையை விட்டு விலகியே விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் சாரதி, நடத்துநர் உட்பட பயணிகள் சிலரும் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு தம்பலகாமம் போக்குவரத்து பொலிஸார் வந்துள்ளதுடன் நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts