போலந்தின் எல்லை மீண்டும் மூடப்படுகிறது – அகதிகளைத் தடுக்க ஜெர்மனி, லிதுவேனியாவுடன் எல்லை கட்டுப்பாடுகள்!
போலந்து அரசு, ஜெர்மனி மற்றும் லிதுவேனியாவுடன் கூடிய தனது எல்லைகளில் மீண்டும் குடிப்பெயர்ச்சி கட்டுப்பாடுகளை திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் அமல்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை, ஜெர்மனியில் முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட அகதிகளை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட எல்லை கட்டுப்பாடுகளுக்கு பதிலடி முயற்சியாகவும், போலந்து அரசின் உள்நாட்டு அரசியல் அழுத்தங்களுக்கான பதிலாகவும் பார்க்கப்படுகிறது.

போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், சமீபத்தில் பாராளுமன்ற நம்பிக்கையோட்டத்தில் தன் அரசாங்கம் வெற்றிபெற்ற பிறகு, இந்த நடவடிக்கையை அறிவித்தார். அகதிகள் மற்றும் சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பாக ஜெர்மனியை குற்றம்சாட்டியுள்ள பீலோ வலதுசாரிகள், “அவர்கள் (ஜெர்மனி) அகதிகளை போலந்து வழியாக அனுப்புகிறார்கள்” எனக் கூறி அழுத்தம் தந்திருந்தனர்.
போலந்தின் உள்துறை அமைச்சகம் கூறியதன்படி, இந்த எல்லை கட்டுப்பாடுகள் தொடக்கத்துக்கு 30 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை மேலும் நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, “சட்டவிரோத குடியேற்றம் என்பது ஒரு குற்றமே,” என போலந்து உள்துறை அமைச்சர் டோமாஸ் சியமோனியாக் தெரிவித்துள்ளார்.
தற்போதைய எல்லைக் கட்டுப்பாடுகளுக்கமைய, ஜெர்மனியின் 467 கி.மீ நீளமுள்ள எல்லையில் 52 இடங்களில் கட்டுப்பாடுகளும், லிதுவேனியாவில் 104 கி.மீ நீளமுள்ள எல்லையில் 13 இடங்களில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான எல்லைக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், போக்குவரத்து நெரிசல் உருவாகும் என்றால், வாகன ஓட்டங்களை சமநிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று லிதுவேனிய அரசு தெரிவித்துள்ளது.

ஜெர்மனியின் புதிய அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ், மே மாதத்தில் பதவியேற்றார். தனது தேர்தல் பிரசாரத்தின் முக்கிய கூறாகவே அகதிகளை குறைக்கும் கொள்கைகளை வலியுறுத்திய அவர், எல்லைகளில் பொலிஸாரை அதிகரித்ததோடு, “சில அகதிகள் நுழைவதற்கே அனுமதிக்கப்படமாட்டார்கள்” என கூறியிருந்தார்.
ஐரோப்பிய யூனியனில் (EU) ‘ஷெங்கன் ஒப்பந்தம்’ மூலம் பெரும்பாலான நாடுகள் மக்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கின்றன. இருப்பினும், உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட பராமரிக்க முடியாத அவசர சூழ்நிலைகள் ஏற்பட்டால், நாடுகள் தற்காலிக எல்லை கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என EU விதிகள் தெரிவிக்கின்றன.

மேலும், “இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் தற்காலிகமாக மட்டுமே இருக்கவேண்டும்” எனவும் “இவை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்,” எனவும் லிதுவேனிய அதிபர் கிடானாஸ் நௌசேடா தெரிவித்துள்ளார்.
தற்போது பல்வேறு நாடுகள் எல்லைப் பிரச்சனைகளை எதிர் நோக்கும் நேரத்தில், புதிதாக வரும் இவ்வாறான செய்திகள் உலக மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
![]()