மதுபானங்கள் மீதான கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வர்த்தமானியை வெளியிடப்பட்டுள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அதி விசேஷ சாராயம் மீதான கலால் வரி லீட்டருக்கு 840 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மேலும் பனை மற்றும் தேங்காய் மூலமான பதப்படுத்தப்பட்ட சாராயம் மீதான கலால் வரி 900 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.