Wednesday, June 18, 2025

மன்னாரில் மதுபானசாலை நடத்துவதற்கான அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தி அனுப்பிய கடிதத்திற்கு இடைக்கால தடையுத்தரவு!

Must Read

மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபானசாலை ஒன்றை நடத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தி மதுவரி ஆணையாளர் நாயகத்தினால் அனுப்பப்பட்ட கடிதத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த மதுபானசாலையின் உரிமையாளரால் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் மகேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள மதுவரி ஆணையாளர் நாயகம், மன்னார் பிரதேச செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு அழைப்பாணை விடுப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

வடமாகாண சுற்றுலா அபிவிருத்திக்கு விரிவான பரிந்துரைகள்: றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆலோசனைக் கூட்டத்தில் உரை!

வடமாகாணத்தின் உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன், யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சு...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img