மன்னார் – மடு பிரதேச செயலாளர் பகுதியிலுள்ள ஜோதிநகர் இரண்டாம் கட்டை பாலத்தின் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர் – மன்னார் பெரியகமம் பிரதேசத்தில் வசித்து வரும் 35 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post Views: 3