January 13, 2026
மாணவர்களுக்கு ஏற்பட்ட சோகம்..!
News News Line Top Updates புதிய செய்திகள்

மாணவர்களுக்கு ஏற்பட்ட சோகம்..!

Feb 17, 2024

அம்பாறை மாவட்டம் – ஓலுவில், நிந்தவூர் எல்லைக் கடற்கரையில் விளையாட்டில் ஈடுபட்ட 8 மாணவர்களில் இருவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் நேற்று(16) மாலை அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காணாமல்போன சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற மாணவனின் உடல் இன்று(17) காலை   கரையோதுங்கியுள்ள நிலையில் மற்றுமொரு மாணவன் தொடர்பான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

15வயதுக்குட்பட்ட08 பாடசாலை மாணவர்கள் தொழுகையை முடித்துக்கொண்டு, கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக்கொண்டிருந்த போது இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை ஏனைய ஆறு மாணவர்களிடம் நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *