Tamil News Channel

மாணவர்கள் மரணத்தில் தொடரும் மர்மம்…!!

Altair

கொழும்பு கொம்பனி வீதியில் உள்ள தொடர்மாடி யொன்றிலிருந்து மாணவனும், மாணவியும் விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், இது தற்கொலையா என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

கொழும்பின் பிரபலமான பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி கற்ற மாணவனும் மாணவியும் சம்பவ தினத்தன்று 2.40 மணியளவில் பாடசாலை சீருடையுடன் அந்த தொடர்மாடிக்கு முச்சக்கரவண்டியில் சென்றுள்ளனர்.

மாணவி “அல்டையர்” தொடர்மாடி குடியிருப்பின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தொடர்புகொண்டு 61 ஆவது மாடியில் உள்ள தனது நண்பியை சந்திக்கச் செல்வதாக தெரிவித்துள்ளார். உடனடியாக அவர் தெரிவித்த முகவரியை தொடர்புகொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அங்கு அவர் தெரிவித்தது போல எவரும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

எனினும் மாணவனும் மாணவியும் அடிக்கடி அந்த தொடர்மாடிக்கு வந்து செல்வதால் அவர்களை செல்வதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனுமதித்துள்ளனர்.

இதன் பின்னர் அவர்கள் ஐந்தாம் மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு மாணவனும் மாணவியும் தங்களது ஆடைகளை மாற்றியுள்ளனர். இதன் பின்னர் “ஜிம்” க்கு சென்று உடற்பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இதன் பின்னர் மாணவன் மோட்டார் சைக்கிளில் வழங்கப்பட்ட பொதியை பெறுவதற்காக கீழே சென்று பொதியை பெற்றுக்கொண்டு, பின்னர் ஐந்தாம் மாடிக்கு திரும்பிச்சென்றுள்ளமை சி.சி.ரி.வி. யில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

4.30 மணியளவில் மாணவனும் மாணவியும் 67 ஆவது மாடிக்கு  சென்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் அவசரமாக வெளியேறுவதற்கான பகுதியின் கதவை திறந்தே இவர்கள் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் உள்ள சிறிய சுவர் போன்ற ஒன்றில் அமர்ந்திருந்ததை சி.சி.ரி.வி. காட்சிகள் காண்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த இருவரினதும் நண்பர் ஒருவர் 61 ஆவது மாடியில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“அல்டையர்” தொடர்மாடி குடியிருப்பில் 70 மாடிகள் உள்ள போதிலும் வெளியாட்கள் 67 மாடிக்கு அப்பால் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் காலணிகள் அவசர  சூழ்நிலையில் வெளியேறுவதற்கான வாசலிற்கு செல்லும் மாடிப்படிக்கு அருகில்  காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இருவரினது உடல்களும் குளிரூட்டிகள் பாதுகாக்கப்படும் 3 ஆம் மாடிக்கு அருகில் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திறந்தபடிக்கட்டுகளுக்கு அப்பால் சி.சி.ரி.வி. கமராக்கள் எவையும் பொருத்தப்பட்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளனர். பொலிஸார் மாணவனும் மாணவியும் எப்படி மூன்றாம்மாடியில் விழுந்துள்ளனர் என்பது தெளிவாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts