மாத்தளையில் மிகப்பெரும் சோகம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரின் சடலங்களை மீட்க உதவிய நாய்..!!
மாத்தளை,அம்போக்கா கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரின் சடலங்களை வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் கண்டுபிடித்து பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையில், கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அந்த பகுதி இன்னும் முழுமையாக மண்ணால் மூடப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரின் சடலங்கள் மீட்பு.
மண்ணில் மூழ்கியிருந்த வீட்டின் இடிபாடுகளைக் கூட கண்டுபிடிக்க முடியாது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனதாக தெரியவந்துள்ளது.
இப்படியான நிலையில், அவர்களின் உடல்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்த நேரத்தில், வீட்டில் இருந்த நாய் நிலத்தடியில் மறைந்திருந்த குடியிருப்பாளர்களைக் கண்டுபிடித்து பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அம்போக்கா கிராமத்தில் சுமார் 80குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு தற்போது ஒரு கோவிலிலும், அவர்களின் தனிப்பட்ட நண்பர்களின் வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.
இதற்கமைய, மாத்தளை, பல்லேபொல பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அம்போக்கா கிராமத்தில் உள்ள மலைத்தொடர் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் அவசர கோரிக்கையொன்றினை விடுத்துள்ளனர்.
கிராம மக்களின் கோரிக்கை,
நிலச்சரிவுகள் காரணமாக வெளியேறுமாறு அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தல் வழங்கும் நிலையில், முறையான அறிக்கை அல்லது ஆய்வு இல்லாமல் வீடுகளிலிருந்து வெளியேற கடினமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் உடனடியாக கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்பு கிராமத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலைமை குறித்த அறிக்கையை விரைவில் வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
![]()