
மாற்றுக் கருத்துடையவர்களை அடக்குவதற்கே பயங்கரவாத திருத்தப்பட்ட சட்டமூலம் : விஜித ஹேரத் சுட்டிக்காட்டு
கடந்த புதன் கிழமை நாடாளுமன்ற அமர்வில் இடம்பெற்ற நீதிமன்ற நியாயசபை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் வடக்கில் பிரச்சினைகள் ஏற்பட்டது ஏன்? தவறான தீர்மானங்களே இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டியது என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
அத்துடன் மக்கள் வீதிக்கு இறங்கும் போது அவர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தவே முயற்சிக்கின்றனர்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
அதனால் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குவார்கள். அதன்போது அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கபடலாம்.
அரசாங்கத்திற்கு எதனையாவது செய்யுமாறு கூறினாலோ, செய்ய வேண்டாமென்று கூறினாலோ பயங்கரவாதியென்று கூறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கிறது. ஆனால் எமது நாட்டில் மாற்றுக் கருத்துடையவர்களை அடக்குவதற்கே இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
கவிதை எழுதியதற்காக இளைஞர் ஒருவர் பல வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
அதேபோன்று அனைத்து பல்கலைக்கழக சங்கத்தின் தலைவர் இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அத்துடன் 1983இல் ஜே.வி.பி யினரை தடை செய்தனர். ஆனால் ஜனநாயக ரீதியில் அரசியல் செய்கின்றோம். வடக்கில் பிரச்சினைகள் ஏற்பட்டது ஏன்? தவறான தீர்மானங்களே இளைஞர்கள் ஆயுதம் ஏந்த தூண்டியது.
மக்கள் வீதிக்கு இறங்கும் போது அவர்களை ஒடுக்க இதனை பயன்படுத்தவே முயற்சிக்கின்றனர்.
அதனால் எமது நாட்டில் தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தில் உண்மையான பயங்கரவாதத்தை தடுப்பதற்கு இந்த சட்டம் பயன்படுத்துவதில்லை. என விஜித ஹேரத் தெரிவித்தார்.