மின் கட்டணத்தில் திருத்தம்…
ஜூலை மாதம் மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (04.05.2024) இலங்கை மின்சார சபையின் கட்டண பிரிவினருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இதன்போது செலவுகளை பிரதிபலிக்கும் கட்டண பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் கடந்த வருடம் முடிவொன்றை எடுத்ததாகவும், அதன்படி ஒவ்வொரு வருடமும் காலாண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை திருத்த தீர்மானித்ததாகவும் அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
![]()