நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 777 சந்தேக நபர்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 52 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 71 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் .
மேலும், குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 226 கிராம் 753 மில்லிகிராம் ஹெரோயின், 277 கிராம் 865 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் , 4,456 கிராம் 845 மில்லிகிராம் கஞ்சா மற்றும் 115 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.