February 7, 2026
மூன்றாம் நிலை சிவப்பு மண்சரிவு நீடித்த வெளியேற்ற எச்சரிக்கை..!!
Top உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

மூன்றாம் நிலை சிவப்பு மண்சரிவு நீடித்த வெளியேற்ற எச்சரிக்கை..!!

Dec 10, 2025

நாட்டின் நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கும் வழங்கப்பட்ட ‘நிலை-3’ சிவப்பு மண்சரிவு வெளியேற்றத்திற்கான எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) மண் சரிவு எச்சரிக்கை இன்று (10) மாலை 04:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப்பிரிவுகள்,

கண்டி மாவட்டம்: பாதஹேவஹெட, ஹரிஸ்பத்துவ, தொலுவ,தும்பனை, பூஜாபிட்டிய, கங்காவட கோரளை, பாததும்பர,அக்குரண, மினிபே, உடபலத, ஹதரலியத்த, குண்டசாலை, பன்வில, மெததும்பர, உடதும்பர, உடுநுவர, யப்தினகௌ, தெல்தோட்டை, கொடதும்பரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

கேகாலை மாவட்டம்: புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, கலிகமுவ, வரகாபொல, மாவனெல்ல ,யட்டியந்தோட்டை மற்றும் ரம்புக்கன DSDகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

குருநாகல் மாவட்டம்: ரிதீகம, மாவத்தகம மற்றும் மல்லவப்பிட்டிய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மாத்தளை மாவட்டம்: ரத்தோட்ட, வில்கமுவ, லக்கல பல்லேகம, அம்பங்கங்க கோரளே, உக்குவெல, மாத்தளை, நாவுல,ரத்தோட்ட பல்லேபொல மற்றும் யடவத்த போன்ற பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *