December 17, 2025
மூன்று கிலோ கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது!
புதிய செய்திகள்

மூன்று கிலோ கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது!

Aug 16, 2024

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து 15/08 வியாழக்கிழமை பிற்பகல் நபர் ஒருவர் மூன்று கிலோ கஞ்சா பொதியுடன் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் பிடிக்கப்பட்டு சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கொழும்புப் பகுதியைச் சேர்ந்த மேற்படி சந்தேக நபர் நுணாவில் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த வேளையிலேயே இவ்வாறு கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *