Tamil News Channel

யாழில் கோர விபத்து – ஆணொருவர் பலி..!

VideoCapture_20250218-150801

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்து நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த நபரின் துவிச்சக்கரவண்டி மீது, யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விபத்தினை ஏற்படுத்திய சாரதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

[யாழ் நிருபர் – இரட்னசிங்கம் முரளிதரன்]

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts