February 9, 2026
யோஷித மற்றும் அவரது பாட்டிக்கு நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி..!
இலங்கை அரசியல் உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

யோஷித மற்றும் அவரது பாட்டிக்கு நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி..!

May 30, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கை ஜூலை 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (30/05/2025) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, ​​வழக்குத் தொடுப்புக்காக ஆஜரான மூத்த அரச சட்டத்தரணி உதார கருணாதிலக, வழக்கு தொடர்பான ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

பிரதிவாதிக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், விசாரணையை எதிர்கொள்ளத் தேவையான ஆவணங்கள் மற்றும் சாட்சி அறிக்கைகளின் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அவற்றை வழங்குமாறு கோரினார்.

நியாயமான விசாரணையை எதிர்கொள்ள இந்த ஆவணங்கள் மற்றும் சாட்சி அறிக்கைகள் தனக்குத் தேவை என்று ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பட்டியலில் உள்ள ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை பிரதிவாதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வழக்குத் தொடுப்புக்காக ஆஜரான மூத்த அரச சட்டத்தரணிக்கு நீதிபதி ஆதித்ய படபெந்தி அறிவுறுத்தினார்.

பின்னர் இந்த வழக்கு ஜூலை 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் மீது சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

அவர்கள் சட்டவிரோதமாக சுமார் 73 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக கூறி பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *