ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் நேற்றையதினம் (07) ரணில் விக்ரமசிங்க கொள்கைப் பிரகடன உரையுடன் ஆரம்பமானது.
இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் சபையிலிருந்து வெளியேறியதை அவதானித்த இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உரத்த குரலில் ‘உட்கார்ந்து கேளுங்கள்’ என கூறினதுடன் அமைதியாக இருக்குமாறு அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு ரணில் விக்ரமசிங்க தனது கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்ததன் பின்னர் நாடாளுமன்றம் இன்று(8) காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.