July 8, 2025
வன்முறையில் ஈடுபட்ட வாள்வெட்டு கும்பல் கைது
News Top புதிய செய்திகள்

வன்முறையில் ஈடுபட்ட வாள்வெட்டு கும்பல் கைது

Dec 6, 2023

கடந்த திங்கட்கிழமை (04) யாழ்ப்பாணம்-தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக  இளைஞன் ஒருவர் மீது மர்ம கும்பல் ஒன்று  வாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

அதன் பின்னர் ஹயஸ் ரக வாகனத்தில் காங்கேசன்துறை – யாழ்ப்பாண வீதியில் தப்பியோடி மல்லாகம் பகுதியில்  பொதுமக்கள் மீது வாள்களை காட்டி அச்சுறுத்தி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது   வன்முறை கும்பல் வாகனத்தில் ஏறி தப்பி ஓடியுள்ளனர் .

தப்பியோடிய வாகனத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும் , வாள்வெட்டுக் கும்பல் தப்பியோடிய்ள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில்  யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவினர்  விசாரணைகளை முன்னெடுதிருந்தனர்.

அதனையடுத்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வாள்வெட்டு கும்பல் பயணித்த வாகனம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

அத்தோடு புதுக்குடியிருப்பில் மறைந்திருந்த இரு சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வாள்வெட்டு சம்பவமானது , யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் இரண்டு வன்முறை கும்பலுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் மோதல் சம்பவத்தின் தொடர்ச்சி என பொலிஸார் தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *