November 14, 2025
வலம்புரிச்சங்குடன் கைது செய்யப்பட்ட பூசகர்..!
News News Line Top Updates புதிய செய்திகள்

வலம்புரிச்சங்குடன் கைது செய்யப்பட்ட பூசகர்..!

Mar 20, 2024

மட்டக்களப்பு நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் சட்டவிரோதமாக சுமார்  இரண்டு கோடி ரூபா பெறுமதியான இரண்டு வலம்புரிச் சங்குகளை விற்பனை செய்ய முயன்ற  பூசகர் ஒருவரை நேற்றைய தினம் (19) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு நகரிலுள்ள குறித்த ஆலய பகுதியில் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் 52 வயதுடைய பூசகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கைப்பற்றப்பட்ட சான்று பொருட்களையும் , கைது செய்யப்பட்ட குறித்த நபரையும்  நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *